ஞாயிறு, டிசம்பர் 11, 2011

தைராய்டு பற்றிய பதிவு


டாக்டர் K.M.முருகானந்தம், கொழும்பு (ஸ்ரீலங்கா) நகரைச் சேர்ந்தவர்.  எனக்கு முகநூல் நண்பர்.  டாக்டர் முருகானந்தம் அவர்கள் நிறைய நோய்கள் பற்றி பதிவுகள் எழுதியிருக்கிறார்.  எனது வேண்டுகோளுக்கிணங்க அவரது பதிவுகளை எனது பதிவில் வெளியிட அனுமதி கொடுத்திருக்கிறார்.
எனவே தைராய்டு நோய் பற்றிய அவரது கட்டுரையை எனது பதிவாக வெளியிடுகிறேன்.  டாக்டர் K.M.முருகான்ந்தம் அவர்களுக்கு எனது மனப்பூர்வ நன்றி.

தொண்டையில் கழலை இல்லை, தைரொயிட் நோயா ?

"கை கால் உளைவு, களைப்பு, உடம்பு நோ, சோம்பல், தூக்கக் குணம், மலச்சிக்கல், உடம்பு பாரமாக இருக்கு, தசைப்பிடிப்பு ...." என்று சொல்லிக் கொண்டே போனாள்.


அந்தப் பெண்மணியின் நோய் அறிகுறிகள் தண்டவாளம் போல முடிவின்றி நீண்டு கொண்டே போயின. அவரை நோட்டமிட்டேன்.

வயது அய்ம்பது இருக்கும். 'வதனமே சந்திரபிம்பமோ' என்பது போல உருண்ட வட்ட முகம், கொழுத்த உடம்பு, வரண்ட தோல், சற்றுக் கரகரத்த குரல், அதிகம் கொட்டியதால் அடர்த்தி குறைந்த தலை முடி.
அவர் கூறிய அறிகுறிகளையும், நான் அவதானித்த குறிகளையும் இணைத்துப் பார்க்கும் போது இவருக்கு தைரொயிட் சுரப்பியின் செயற்பாடு குறைவாக இருக்கலாமோ எனத் தோன்றியது.
இவற்றுடன்

·                     குளிர் சுவாத்தியத்தைத் தாங்க முடியாத தன்மை
·                     மறதி
·                     மனச் சோர்வு
·                     தசைப் பிடிப்பு போன்ற அறிகுறிகளும் சேர்ந்திருப்பதுண்டு. 
நாடி பிடித்துப் பார்த்தபோது நாடித் துடிப்பு சற்றுக் குறைந்திருந்தமை எனது சந்தேகத்தை வலுப்படுத்தியது. இளம் பெண்களுக்கு மாதவிடாய்க் குழப்பங்களும் ஏற்படுவதுண்டு.
"
உங்களுக்கு தொண்டையில் உள்ள தைரொயிட் சுரப்பி வேலை செய்வது குறைவு போல இருக்கு. இரத்தம் பரிசோதித்துப் பார்ப்போம்" என்றேன்.
"
எனக்கு தொண்டையில் வீக்கம் ஒன்றும் கிடையாதே. ஏன் தைரொயிட் நோய் என்கிறீர்கிறீர்கள்?" என என் முடிவில் சந்தேகம் எழுப்பினார்.
தைரொயிட் என்பது எமது தொண்டைப் பகுதியில் உள்ள ஒரு சுரப்பி. இதனால் தைரொயிட் நோய் என்றாலே தொண்டைப் பகுதியில் கழலை என்பதுதான் பெரும்பாலானவர்களின் எண்ணமாயிருக்கிறது.
பள்ளிப் பாடப் புத்தகத்தில் படித்த அயடின் குறைபாட்டால் வரும் தொண்டைக் கழலை (Goitre) தான் பலரின் ஞாபகத்திற்கு வரும். எனவே அவரது சந்தேகத்தில் நியாயம் இருக்கவே செய்கிறது.
சுரப்பியில் வீக்கம் எதுவும் இல்லாமலே பல தைரொயிட் நோய்கள் வருவதுண்டு. அது

·                     குறைவாகச் சுரப்பதால் ஏற்படும் கைபோதைரொயிடிசம் (Hypothyroidism),
·                     அதிகம் சுரப்பதால் ஏற்படும் கைபேர்தைரொயிடிசம் (hyperthyroididm) ஆகியவை இத்தகையவே.
தொண்டையில் உள்ள தைரொயிட் சுரப்பியில் வீக்கம் (கழலை)இருந்தால் அது முன்பு குறிப்பிட்ட

·                     அயடின் குறைபாட்டால் ஏற்படும் கட்டியாகவோ, அல்லது 
·                     நீர்க் கட்டியாகவோ (Cyst) இருக்கலாம். 
·                     புற்று நோயாலும் அவ்விடத்தில் கட்டி தோன்றலாம். 
எனவே தைரொயிட் சுரப்பியில் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படலாம் என்பதை நாம் உணர வேண்டும். அவற்றிற்கு வெவ்வேறு விதமான சிகிச்சை முறைகள் இருக்கின்றன. எத்தகைய சிகிச்சை தேவையென வைத்தியர்தான் தீர்தானிக்க முடியும்.
மேற் கூறிய பெண்ணுக்கு இரத்தப் பரிசோதனைகள் செய்தபோது அது சுரப்பியின் குறைச் செயற்பாட்டால் வரும் நோய் (Hypothyroidism) என்பது தெளிவாகியது. தைரொக்சின் (Thyroxine) மாத்திரைகள் கொடுத்தபோது அறிகுறிகள் நீங்கிக் குணமாகியது.
ஆயினும் அம் மருந்தை அவர் பெரும்பாலும்

·                     வாழ்நாள் முழுவதும் உபயோகிக்க வேண்டி நேரிடும். 
·                     காலையில் வெறும் வயிற்றில் போட வேண்டிய மாத்திரை அது. 
·                     மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இரத்தப் பரிசோதனை செய்து மருந்தின் அளவை தீர்மானிக்க வேண்டியிருக்கும்.
இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு செய்யுங்கள்.  இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள்.  மற்ற திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன். Google Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் Dash Board க்கு வந்து விடும்.  உங்களது Email id ஐ அதற்கான கட்ட்த்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து விடும்.
மிக்க நன்றி.


செவ்வாய், நவம்பர் 29, 2011

கடையநல்லூர் ஆஞ்சனேயர் கோவில்


ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரயில் பாதையில் (மதுரை – செங்கோட்டை மார்க்கம் சுமார் அறுபத்திரெண்டு கிலோமீட்டர் தொலைவில் கடையநல்லூர் அமைந்துள்ளது.







சாலை வழியில் மதுரை- செங்கோட்டை சாலையில் சுமார் அறுபத்தி ஐந்து   கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கடையநல்லூருக்கு முந்தைய பேருந்து நிறுத்தம் கிருஷ்ணாபுரத்தில் இறங்க வேண்டும்.  

கடையநல்லூர் ரயில் நிலையத்திலிருந்தும், கிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தத்திலிருந்தும் ‘ஷேர் ஆட்டோக்கள்  ஓடிக்கொண்டிருக்கின்றன.  



கடையநல்லூர் ஆஞ்சனேயர் கோவில் – ‘அருள்மிகு கோபாலகிருஷ்ண சுவாமி வகையறா திருக்கோவில்கள்' என்ற தனியார்களுக்கு பாத்தியப் பட்ட கோவில். தற்போது அரசாங்கத்தின் ‘இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.



ரயில் நிலையத்திலிருந்து கோவிலுக்கு செல்லலாம்.  இது கடையநல்லூர் ரயில் நிலையம்.  இங்கு கோவிலைப் பற்றிய அறிவிப்பும் இருக்கிறது.  மதுரை செங்கோட்டை பாசஞ்சர் ரயில் மிகவும் வசதியாக இருக்கிறது.  மதுரையில் காலை ஏழு மணிக்கு கிளம்புகிறது.  இங்கு சுமார் பத்து மணிக்கு வந்து சேருகிறது.  அனேகமாக ரயில் முழுவதும் இங்கு காலியாகி விடுகிறது என்று சொல்லலாம்.




திரும்புவதற்கு மதியம் ஒரு மணிக்கு ரயில் இருக்கிறது.  மாலை சுமார் ஐந்து மணிக்கு இருக்கும். 

ரயில் நிலையத்திலிருந்து ‘ஷேர் ஆட்டோக்கள் கிட்டத்தட்ட இருபத்தைந்து வரை ஓடுகின்றன. மிகவும் நியாயமான கட்டணத்தில் ஓடுகின்றன. பக்தர்களுக்கு உதவும் எண்ணம் கொண்ட நண்பர்களாக இருக்கிறார்கள்.  நாம் செல்லும் பாதை இருமருங்கும் வயல்கள் இருக்கின்றன. நல்ல உயர்ந்த மரங்கள் வழி நெடுக இருக்கின்றன.நல்ல காற்று. கிட்டத்தட்ட ரயில் நிலையத்திலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் கோவில் இருக்கிறது. நிறைய பக்தர்கள் நடந்து வருகிறார்கள்.நடப்பது அப்படி ஒன்றும் கடினமாக இல்லை. சாலை வசதி நன்றாக இருக்கிறது.

கோவில் அருகில் வந்து விட்டோம். கோவில் வயல்களுக்கு நடுவே பசுமையாக அமைந்திருக்கிறது.







 சாலையிலிருந்து மேற்கே பார்த்தால் மேற்கு தொடர்ச்சி மலை நீண்டு கிடக்கிறது.  அற்புதமான காட்சி.

சாலையில் வடக்கு பக்கத்தில் பெரிய கண்மாய் இருக்கிறது


தற்போது தண்ணீர் இல்லை. கோவில் தெற்கு பக்கத்தில் அமைந்திருக்கிறது. அதற்கான புகைப்படங்களை அங்கங்கு இணைத்திருக்கிறோம்.

சாலையிலிருந்து கீழே இறங்கி செல்ல வேண்டும். நல்ல சிமிண்ட் பாதை போட்டிருக்கிறார்கள்.




பக்கத்து தோட்ட்த்து உரிமையாளர்கள் அவர்கள் தோட்டத்தை பாதுகாக்க கம்பி அளி போட்டிருக்கிறார்கள். சுற்றிலும் பசுமையான வயல்கள் – நடுவே கோவில் – மிகவும் அருமையாக இருக்கிறது. 
முன்பே ராஜகோபுரம் அருமையாக கம்பீரமாக இருக்கிறது. 



 கோவிலும் நம்மை ஈர்க்கிறது. நுழைந்தவுடன் இடது பக்கம் இரண்டு ஜீவசமாதிகள் இருக்கின்றன. சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. ஒன்று – சீனிவாச சாஸ்திரிகள் என்று இருக்கிறது


 இரண்டாவது – ஞானாந்த சரஸ்வதி கோபாலய்யர்) – 26.9.1939 என்று இருக்கிறது.


கோவிலுக்குள் செல்வோம்.  முன்பு அர்ச்சனை சீட்டுகள் கொடுக்கிறார்கள்.


நிர்வாகியும் அவர் தான்.அதிகாரி வெளியிலிருந்து வர வேண்டும்.  இவர் தான் இங்கு முழு பொறுப்பு. 
பிரகாரம் சுற்றலாம். மூலையில் வன்னிமரத்தடியில் வினாயகர் இருக்கிறார்.


வன்னி மரத்தடி வினாயகர் விசேஷம் என்கிறார்கள். சுற்றி வந்தால் அருமையான தியான கூடம் இருக்கிறது.


இவையெல்லாம் சமீபத்திய கட்டுமானமாக இருக்கிறது. மூங்கில் மரத்தினடியில் ஆஞ்சனேயர் படங்கள் இருக்கின்றன. சுற்றிலும் பிரார்த்தனை கடிதங்கள் கட்டப் பட்டிருக்கின்றன

 மற்றும் ஒரு சன்னதி இருக்கிறது.


 அருகில் பழைய சிற்பங்கள் இருக்கின்றன



பிரகாரம் சுற்றி வரும் இடத்தில் ஒரு இடத்தில் ஒரு பெரியவர் செந்தூரமும் வெண்ணெயும் குழைத்து நாமம் இடுகிறார்


பிரகாரம் அருமையாக, சுத்தமாக பராமரிக்கப் படுகிறது.அங்கங்கு குடிநீர் குழாய்கள் இருக்கின்றன. கை கழுவதற்கு அமைப்புக்கள் இருக்கின்றன. குப்பைத்தொட்டிகள் இருக்கின்றன. நன்கு பராமரிக்க மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

பிரகாரம் சுற்றி விட்டோம்.சன்னதிக்கு செல்வோம். வரிசையில் நிற்பதற்கு அருமையாக பாதைகள் போட்டு கம்பிகள் வைத்து கட்டப் பட்டிருக்கிறது. நிற்கும் போது காற்று அவ்வளவு சுகமாக இருக்கிறது.



 ஆஞ்சனேயர் தெற்கு பார்த்து காட்சி அளிக்கிறார். அபய ஹஸ்த கோலம்.


அற்புதமாக இருக்கிறார். காணக் கண் கோடி வேண்டும்.திரும்பத் திரும்ப உங்களை வரவழைக்கும் அபூர்வ சக்தி மிக்கவராக இருக்கிறார். இந்த சன்னதியில் பிரசாதமாக ‘திருநீறு’, தீர்த்தம், துளசி வழங்கப் படுகிறது.இது வித்தியாசமாக படுகிறது.விசாரித்ததில், இங்கு யாகம் வளர்த்த இடம் என்கிறார்கள். அதனால் திருநீறு வழங்கப் படுகிறது என்கிறார்கள். ராமாயணத்தில் லட்சுமணனுக்காக மூலிகை தேடி ஆஞ்சனேயர் வரும் வழியில் தாகத்திற்காக இங்கு இறங்கினாராம். ஆஞ்சனேயருக்காக அங்கிருப்பவர்கள் காத்துக் கொண்டிருந்தார்களாம்.இங்கு உள்ள தெப்பம் ஆஞ்சனேயருக்காக தோற்றுவிக்கப் பட்டது என்கிறார்கள். பட்டாஷேபிகத்திற்கு அப்புறம் ராமர், சீதை ஆஞ்சனேயருக்கு காட்சி கொடுத்தார்கள் என்பது வரலாறு. 

அதற்கப்புறம் ஆஞ்சனேயர் இங்கிருந்து வரும் பக்தர்களுக்கு ‘அபய ஹஸ்த கோலத்தில் இருந்து பக்தர்களை ஆசிர்வதிக்கிறார்.


மற்றொரு சன்னதியில் ‘ராமர், சீதை, லட்சுமணன் பட்டாபிஷேகக் கோலம். கிழக்கு பார்த்த கோலம். அருகில் ஆஞ்சனேயர் இருக்கிறார். அற்புதமான சிலை அமைப்பு. அருமையான சன்னதி. அங்கு குங்குமம் பிரசாதமாக வழங்கப் படுகிறது.


இந்த வளாகத்தில் படிக்கட்டுகளுடன் கூடிய அழகிய தெப்பம் அமைந்திருக்கிறது. படிக்கட்டுகளின் பக்கங்களில் இரண்டு குகை போன்ற அமைப்புகள் இருக்கின்றன. பாதுகாப்பு காரணங்களால் மூடி வைக்கப் பட்டிருக்கின்றன


ஒரு மூலையில் பைரவர் சன்னதி இருக்கிறது.


இந்த வளாகத்தில் தான் அன்னதானம் நடைபெறுகிறது.
 அரசின் உத்தரவு படி தினம் ஐம்பது நபர்களுக்கு அன்னதானம் வழங்கப் படுகிறது.

அன்னதானத்தைப் பற்றி:

இங்கு அன்னதானம் சிறப்பாக செய்கிறார்கள்




அந்தப் பணியையும் கோவில் நிர்வாகம் செய்பவர்களே சேர்ந்து செய்ய வேண்டியதிருக்கிறது. அதற்கு அவர்கள் வரும் பக்தர்களை சேர்த்து கொள்ளலாம்.; இது எங்களது யோசனை.கூட்டத்தையும் கட்டுப்படுத்தி, கோவிலையும் நிர்வகித்து, பரிமாறுதலையும் அவர்களே செய்கிறார்கள். மிகவும் சிரமப் படுகிறார்கள்.


இந்த ஸ்தலத்திற்கு சனிக்கிழமைகளிலும், வியாழக் கிழமைகளிலும் நல்ல கூட்டம் வருகிறது என்கிறார்கள்






இந்த பதிவிற்காக எங்களால் நிறைய படங்கள் எடுக்கப் பட்டன.  இந்த புகைபடங்களை எடுக்க உதவிய எனது மனைவி திருமதி உமாகாந்தி அவர்களுக்கும், எனது தங்கை புதல்வர்கள் (இரட்டையர்கள்) அருண் ஸ்ரீராமுக்கும், அஷோக் குமாருக்கும் எங்களது மனப்பூர்வ நன்றிகளும், வாழ்த்துகளும்.

மற்றும் செய்திகளும் புகைப்படங்களும் கீழ்குறிப்பிட்டுள்ள பதிவுகளில் இருந்து எடுத்திருக்கிறோம். அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றிகள். அந்த பதிவுகளையும் படித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

http://ramchel.blogspot.com/2010/08/krishnapuram-anjaneyar-temple.html

http://prtraveller.blogspot.com/2010/01/kadayanallur-anjaneya-temple.html

http://www.trinethram-divine.com/2011/08/anjaneyar-muthangi-alankaram.html


இந்த பதிவை கணினியில் ஏற்ற உதவிய, எங்களது தள மேம்பாட்டுக்கு நல்ல யோசனைகள், நல்ல விமர்சனங்கள் கூறும் திருமதி ரமாமணி அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றி.

மிக்க நன்றி.

வெள்ளி, நவம்பர் 25, 2011

இருதய நோய் (மாரடைப்பு) – ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கை


திரு ரவி நாக் அவர்கள் எனது முக நூல் நண்பர்.  இருதய நோய் பற்றிய ஒரு அற்புதமான கட்டுரை எழுதியிருக்கிறார்.  முன் பரிசோதனை செய்வதற்காக ஒரு மென்பொருள் (software)  தயார் செய்திருக்கிறார்.  அந்த மென்பொருள் பரிசோதனை செய்யப்பட்டு மிக சிறப்பாக கனடா நாட்டில் செயல் பட்டு வருகிறது.  அந்த மென்பொருளை நமது மக்களுக்கு பயன்பாட்டிற்கு தர தயாராக இருக்கிறார்.  அவரது நல்முயற்சிக்கு தலை வணங்குகிறேன்.
நான் கடந்த 10.11.2010 அன்று காலை ஏழே கால் மணி அளவில் செய்தித்தாள்கள் படித்து கொண்டிருந்தேன்.  இடது  தோளில் வலி இருந்து முன் கை வரை பரவியது.  உடல் முழுக்க வேர்த்த்து.  உடனடியாக அருகில் உள்ள மருத்துவ மனை சென்று ஊசி போட்டு இ.சி.ஜி. எடுத்தோம்.  அந்த மருத்துவர் உடனடியாக இருதய மருத்துவ மனைக்கு செல்ல சொன்னார்.  நாங்கள் எங்களது குடும்ப மருத்துவரும் இருதய மருத்துவருமான டாக்டர் திரு கே.காமராஜ். எம்.டி. சிவகாசி அவர்களை பார்க்க சென்றோம்.  காலை ஒன்பதே கால் மணிக்கு சிவகாசி சென்று விட்டோம்.  (அந்த இரண்டு மணி நேரங்கள் – Golden Hours).  அவரது சிகிச்சையால் என்னை பிழைக்க வைத்து விட்டார்.  நான் இன்று உங்கள் முன்னே இருக்கிறேன்.
திரு ரவி நாக் அவர்களின் கட்டுரை இதை தான் பெரிதும் விளக்குகிறது.  திரு ரவி நாக் அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றிகளும்,  மனமார்ந்த வாழ்த்துகளும்.  அவரது சேவை பெரிதும் பெருகட்டும். 

வணக்கம் - இந்த ஒர் நாளுக்காக இரண்டு வருடம் காத்திருந்தேன். ஆம்  மாரடைப்பு எனும் ஒரு கொடிய நோய் முன்பெல்லாம் பணக்காரர்களின் நோயாக இருந்து,  இப்போது ஏழை பணக்காரன்,  ஜாதி, மதம், சின்னவர், பெரியவர் என பாகுபாடின்றி இனறளவில் விஸ்வரூபமாய் இருக்கும் ஹார்ட் அட்டாக் எனும் அழையா விருந்தாளி தான். ஆம் ஹார்ட் அட்டாக் 87% சதவிகித மக்களுக்கு எப்பொழுது  வரும் என தெரியவே தெரியாது. முக்கால்வாசி பேர் ஹார்ட் அட்டாக் சிம்ப்டம்ஸ் (அறிகுறிகள்) கொஞ்சமும் தெரியாமல் சிலர் கை வலி,  சிலருக்கு வாயுத் தொல்லை எனவும்,  சில பேர் உஷ்ணத்தால் வியர்க்குது என நினைத்து ஹார்ட் அட்டாக்கில் மரணிப்பது ஒரு தினம் தோறும் நடக்கும் நிகழ்ச்சி. 13% சதவிகித மக்கள் தூக்கத்திலேயே என்ன நடக்குது என தெரியாமல் இறந்து போகின்றனர். சிலர் மட்டும் அதை சரியாக கவனித்து சரியான நேரத்தில் மருத்துவமனை செல்வதால் அந்த "கோல்டன் ஹவர்ஸ்" எனும் நேரத்திற்குள் அவர்கள் காப்பாற்றப்பட்டு செகண்ட் அட்டாக்,  மூன்றாவுது , நான்காவது அட்டாக் வரை தாங்குகின்றனர்.  ஹார்ட் அட்டாக் தவறான உணவு பழக்க வழக்கம்,  உடற்பயிற்சியின்மை,  அதிக பருமன் ஆட்களுக்கு மட்டும் தான் வரும் என கூறுவது தவறு. சிலருக்கு வம்சா வழி பிரச்சினைகள்,  சில ஷாக்கிங் செய்திகள்,  அதிக ஸ்ட்ரெஸ் எனப்படும் ஒரு நவீன பிரச்சினை மூலமாகவும் இந்த ஹார்ட் அட்டாக் வருவதுண்டு. ஒரு காலத்தில் ஹார்ட் அட்டாக்,  பைபாஸ் சர்ஜரி,  ஆஞ்ஜியோ பிளாஸ்ட்,  ஸ்டென்ட்,  வால்வு ரீபிளேஸ்மென்ட்,  ஃபேஸ்மேக்கர் எல்லாம் ஏதோ அன்னிய சக்திகள் மாதிரி கேட்ட நாம் இதை இப்பொழுது ஒரு டிரென்டாகி போனாலும் ஒரு தடவை அட்டாக் வந்தவர்கள் மிகவும் பாதுகாப்பாகி அதன் சிந்தனையுடன் தன்னை பேணி காக்கின்றனர். இது ஒரு உலக அளவில் பேசப்படும் ஒரு விஷயம். இந்தியாவில் இந்த நோய் விழிப்புணர்வு மிகவும் மோசம். இதில் பிழைப்பவர்களை விட இறப்பவர்கள் தான் மிக அதிகம். ஆம் இந்த நோய்க்கு காரணம் நாம் இதை பற்றி முதல் அட்டாக் வரும் வரை நாம் அதை பற்றி கவலைப் படுவதில்லை.   ஆம் 25 வயதுக்கு மேல் எல்லா ஆண் பெண்ணும் கண்டிப்பாக வருடத்திற்க்கு ஒரு முறை பிளட் டெஸ்ட் செய்து அதில் முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டியது - LDL Bad Cholestrol - கெட்ட கொலஸ்ட்ரால்,  Triglycerides - டிரைகிளைசிரய்ட்ஸ்,  Diabates - I - II டயாபட்டீஸ் மற்றும் Blood Pressure -  ரத்த கொதிப்பு.  இது நான்கும்  தெரிந்தால் ஒரளவுக்கு உங்களுக்கு ஹார்ட் அட்டாக் பற்றி அதன் தாக்கம் உங்களுக்கு இருக்கிறதா என்று டாக்டரின் உதவியோடு தெரிய வரும். இதை நாம் ஏனோ செய்வதில்லை அதற்கு மாறாக ஒரு அட்டாக் வந்த பிறகு அந்த குடும்பம் படும் அவஸ்தை சொல்லி தெரிவதில்லை.

கனடா போன்ற நாடுகள் அந்த நாட்டில் வசிக்கும் அனைவருக்கு இலவச மருத்துவம் அளிக்கிறது.  அந்த வகையில் அவர்கள் 2006 முதல் பிரவென்டிவ் மெடிசன் (Preventive Medicine)  எனும் ஒரு விஷயத்திற்கு நிறைய செலவு செய்து அதன் மூலம் வரும் நோய்களை முன்பே அதை பற்றி தெரிய வைத்து அதன் அவார்னஸ் (விழிப்புணர்வு) பற்றி நன்கு எடுத்துரைத்து மற்றும் அதற்கு எப்படியெல்லாம் தயாராக வேண்டும் என  கூறுவதால் வரும் முன் நோய் காக்கும் திட்டம் நன்கு பிரபலம்.  இதற்காக என்னை 2009 ஆம் ஆண்டு சி எம் ஏ எனப்படும் கனடியன் மெடிக்கல் அசோசியேஷன் ஒரு மென்பொருளை செய்ய ஆர்டர் கொடுத்தது. ஆம் இந்த சாப்ட்வேர் மிகவும் எளிமையானது. இதை வைத்து இரன்டு நிமிடத்தில் நமக்கு எப்பொழுது ஹார்ட் அட்டாக் வரும் எந்த சதவிகிதம் நம்க்கு சான்ஸ் இருக்கிறது என தெரியப்படுத்தும்.  இதை சுமார் 600 மருத்துவமனையில் டச் ஸ்கிரீன் கியாஸ்க் எனும் தொடு கணினி மூலம் மக்களே அறியும் வகையில் உருவாக்கப் பட்டது. என்னுடைய ஹெல்த்கேர் (Health Care) டிவிஷன் இந்த பொறுப்பை ஏற்று சுமார் 3  மாதத்திற்குள் செய்து சமர்ப்பித்தது. இதில் டெஸ்ட் செய்யப்பட்ட 100 பேரில் 96.7 பேருக்கு சரியான ரிஸல்ட் வந்தது தான் என்னுடைய சக்ஸஸ்.  இதை நானும் என்னுடைய டீமும் செய்ய உறுதுனையாக இருந்த இன்னொரு முக்கிய பங்கு யுனிவர்ஸிட்டி ஆஃப் நாட்டிங்காம் - University of Nottingham.   இது செய்து கொடுத்த போதே இது நம்ம ஊருக்கு கொண்டு சேர்த்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன்.  ஆனால் இரண்டு வருட எக்ஸ்குலிஸ்வ் கான்டிராக்ட் (Exclusive Contract)  மற்றும் என் டி ஏ (NDA - Non Disclosure Agreement) காரணம் தான். இது இன்றோடு இரண்டு வருடம் முடிவதால் இன்றிலிருந்து  நான் யாருக்கும் ஷேர் செய்யலாம். இது பேஸிக் வர்ஷன் தான்.   இதன் அட்வான்ஸ் வெர்ஷன் சீக்கிரம் வெளியிடுவேன். மற்றும் இதை இலவசமாக நீங்கள் உபயோகப் படுத்த ஒரு பெர்மிஷனும் தேவை இல்லை. இதை உங்கள் கிளினிக்குகோ அல்லது மருத்துவமனைக்கோ பயன்படுத்த என்னிடம் முறையாக அனுமதி பெற வேண்டும்.  இதன் காப்புரிமை (PATENT) என் பெயரிலும் என்னுடைய கம்பெனியான "இன்ஸைட் ஹெல்த்கேர்" - Insight Healthcare மற்றும் "இன்ஸைட் குளோபல் குருப் - அமெரிக்கா" Insight Global Group - USA, " நாம்ட் - நார்த் அமெரிக்கன் மெடிக்கல் டெக்னாலஜி" - NAMT - North American Medical Technologies - Canada க்கு சொந்தமானது. இதை வியாபார ரீதியாக பயன்ப்டுத்த மற்றும் இதன் லைசன்ஸை உங்கள் மருத்துவமனை இனையதளத்தில் யூஸ் பண்ண கண்டிப்பாக அனுமதி தேவை.

இன்றே நீங்கள்  மற்றும் உங்கள் குடும்பம் மற்றும் உங்கள் நண்பர்கள் எல்லோரும் இதை ஃப்ரீயாக டெஸ்ட் செய்து ஹார்ட் அட்டாக்கில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். இது ஒரு அறிவியல் ஆய்வு தான் இது மருத்துவரின் ஆலோசனைக்கு மாற்று வழி இல்லை. 

நீங்கள்  முப்பதிலிருந்து நாற்பது வயதிற்குள் 8% அல்லது அதுக்கு மேல் வந்தால் நீங்கள் உடனே உங்கள் ஃபேமிலி டாக்டர் அல்ல்து கார்டியோ ஸ்பெஸலிஸ்டிடம் உடனே செல்லுங்கள்.   அட்வான்ஸ் வெர்ஸனில் மட்டுமே எந்த வயதில் உங்களுக்கு வரும் என தெரியவரும். அதை சீக்கிரம் அப்லோடு செய்கிறேன்.

இதற்காக இரண்டு நாட்டின் செர்வர்களில் லோட் செய்துள்ளேன் -

USA - www.asknagravi.com/heart
Canada - www.namt.ca/heart

Very Soon I am developing this i-phone app and android app also to check without Internet. YOu may lod this in your clinics and Hospitals without internet after obtaining a LEGAL permission from me.

Thanks & Regards - Nag Ravi on 23rd November 2011.

Copyright © 2009-11 Insight Global / NAMT / Ravi Nagarajan. ALL RIGHTS RESERVED.

Materials on this web site are protected by copyright law. This software is developed with a formula from University of Nottingham - UK with proper license and copyright protected. Access to the materials on this web site for the sole purpose of personal educational and research use only. Where appropriate a single print out of a reasonable proportion of these materials may be made for personal education, research and private study. Materials should not be further copied, photocopied or reproduced, or distributed in electronic form. Any unauthorised use or distribution for commercial purposes is expressly forbidden. Any other unauthorised use or distribution of the materials may constitute an infringement of Insight Health Care's or it's inventor Ravi Nagarajan copyright and may lead to legal action.

For avoidance of doubt, any use of this site as a web service to obtain a Insight Health Care's Cardio Forecast®  for any purpose is expressly forbidden. Similarly, use of this website for developing or testing software of any sort is forbidden unless permission has been explicitly granted.

Insight Health Care - A Division of Insight Global Group
இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு செய்யுங்கள்.  இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள்.  மற்ற திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன். Google Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் Dash Board க்கு வந்து விடும்.  உங்களது Email id ஐ அதற்கான கட்ட்த்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து விடும்.
மிக்க நன்றி.