ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரயில் பாதையில் (மதுரை – செங்கோட்டை மார்க்கம் சுமார் அறுபத்திரெண்டு கிலோமீட்டர் தொலைவில் கடையநல்லூர் அமைந்துள்ளது.
சாலை வழியில் மதுரை- செங்கோட்டை சாலையில் சுமார் அறுபத்தி ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கடையநல்லூருக்கு முந்தைய பேருந்து நிறுத்தம் கிருஷ்ணாபுரத்தில் இறங்க வேண்டும்.
கடையநல்லூர் ரயில் நிலையத்திலிருந்தும், கிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தத்திலிருந்தும் ‘ஷேர் ஆட்டோக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
கடையநல்லூர் ஆஞ்சனேயர் கோவில் – ‘அருள்மிகு கோபாலகிருஷ்ண சுவாமி வகையறா திருக்கோவில்கள்' என்ற தனியார்களுக்கு பாத்தியப் பட்ட கோவில். தற்போது அரசாங்கத்தின் ‘இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
ரயில் நிலையத்திலிருந்து கோவிலுக்கு செல்லலாம். இது கடையநல்லூர் ரயில் நிலையம். இங்கு கோவிலைப் பற்றிய அறிவிப்பும் இருக்கிறது. மதுரை செங்கோட்டை பாசஞ்சர் ரயில் மிகவும் வசதியாக இருக்கிறது. மதுரையில் காலை ஏழு மணிக்கு கிளம்புகிறது. இங்கு சுமார் பத்து மணிக்கு வந்து சேருகிறது. அனேகமாக ரயில் முழுவதும் இங்கு காலியாகி விடுகிறது என்று சொல்லலாம்.
திரும்புவதற்கு மதியம் ஒரு மணிக்கு ரயில் இருக்கிறது. மாலை சுமார் ஐந்து மணிக்கு இருக்கும்.
ரயில் நிலையத்திலிருந்து ‘ஷேர் ஆட்டோக்கள் கிட்டத்தட்ட இருபத்தைந்து வரை ஓடுகின்றன. மிகவும் நியாயமான கட்டணத்தில் ஓடுகின்றன. பக்தர்களுக்கு உதவும் எண்ணம் கொண்ட நண்பர்களாக இருக்கிறார்கள். நாம் செல்லும் பாதை இருமருங்கும் வயல்கள் இருக்கின்றன. நல்ல உயர்ந்த மரங்கள் வழி நெடுக இருக்கின்றன.நல்ல காற்று. கிட்டத்தட்ட ரயில் நிலையத்திலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் கோவில் இருக்கிறது. நிறைய பக்தர்கள் நடந்து வருகிறார்கள்.நடப்பது அப்படி ஒன்றும் கடினமாக இல்லை. சாலை வசதி நன்றாக இருக்கிறது.
கோவில் அருகில் வந்து விட்டோம். கோவில் வயல்களுக்கு நடுவே பசுமையாக அமைந்திருக்கிறது.
சாலையிலிருந்து மேற்கே பார்த்தால் மேற்கு தொடர்ச்சி மலை நீண்டு கிடக்கிறது. அற்புதமான காட்சி.
சாலையில் வடக்கு பக்கத்தில் பெரிய கண்மாய் இருக்கிறது
தற்போது தண்ணீர் இல்லை. கோவில் தெற்கு பக்கத்தில் அமைந்திருக்கிறது. அதற்கான புகைப்படங்களை அங்கங்கு இணைத்திருக்கிறோம்.
சாலையிலிருந்து கீழே இறங்கி செல்ல வேண்டும். நல்ல சிமிண்ட் பாதை போட்டிருக்கிறார்கள்.
பக்கத்து தோட்ட்த்து உரிமையாளர்கள் அவர்கள் தோட்டத்தை பாதுகாக்க கம்பி அளி போட்டிருக்கிறார்கள். சுற்றிலும் பசுமையான வயல்கள் – நடுவே கோவில் – மிகவும் அருமையாக இருக்கிறது.
முன்பே ராஜகோபுரம் அருமையாக கம்பீரமாக இருக்கிறது.
கோவிலும் நம்மை ஈர்க்கிறது. நுழைந்தவுடன் இடது பக்கம் இரண்டு ஜீவசமாதிகள் இருக்கின்றன. சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. ஒன்று – சீனிவாச சாஸ்திரிகள் என்று இருக்கிறது
இரண்டாவது – ஞானாந்த சரஸ்வதி கோபாலய்யர்) – 26.9.1939 என்று இருக்கிறது.
கோவிலுக்குள் செல்வோம். முன்பு அர்ச்சனை சீட்டுகள் கொடுக்கிறார்கள்.
நிர்வாகியும் அவர் தான்.அதிகாரி வெளியிலிருந்து வர வேண்டும். இவர் தான் இங்கு முழு பொறுப்பு.
பிரகாரம் சுற்றலாம். மூலையில் வன்னிமரத்தடியில் வினாயகர் இருக்கிறார்.
வன்னி மரத்தடி வினாயகர் விசேஷம் என்கிறார்கள். சுற்றி வந்தால் அருமையான தியான கூடம் இருக்கிறது.
இவையெல்லாம் சமீபத்திய கட்டுமானமாக இருக்கிறது. மூங்கில் மரத்தினடியில் ஆஞ்சனேயர் படங்கள் இருக்கின்றன. சுற்றிலும் பிரார்த்தனை கடிதங்கள் கட்டப் பட்டிருக்கின்றன
மற்றும் ஒரு சன்னதி இருக்கிறது.
அருகில் பழைய சிற்பங்கள் இருக்கின்றன
பிரகாரம் சுற்றி வரும் இடத்தில் ஒரு இடத்தில் ஒரு பெரியவர் செந்தூரமும் வெண்ணெயும் குழைத்து நாமம் இடுகிறார்
பிரகாரம் அருமையாக, சுத்தமாக பராமரிக்கப் படுகிறது.அங்கங்கு குடிநீர் குழாய்கள் இருக்கின்றன. கை கழுவதற்கு அமைப்புக்கள் இருக்கின்றன. குப்பைத்தொட்டிகள் இருக்கின்றன. நன்கு பராமரிக்க மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
பிரகாரம் சுற்றி விட்டோம்.சன்னதிக்கு செல்வோம். வரிசையில் நிற்பதற்கு அருமையாக பாதைகள் போட்டு கம்பிகள் வைத்து கட்டப் பட்டிருக்கிறது. நிற்கும் போது காற்று அவ்வளவு சுகமாக இருக்கிறது.
பிரகாரம் சுற்றி விட்டோம்.சன்னதிக்கு செல்வோம். வரிசையில் நிற்பதற்கு அருமையாக பாதைகள் போட்டு கம்பிகள் வைத்து கட்டப் பட்டிருக்கிறது. நிற்கும் போது காற்று அவ்வளவு சுகமாக இருக்கிறது.
ஆஞ்சனேயர் தெற்கு பார்த்து காட்சி அளிக்கிறார். அபய ஹஸ்த கோலம்.
அற்புதமாக இருக்கிறார். காணக் கண் கோடி வேண்டும்.திரும்பத் திரும்ப உங்களை வரவழைக்கும் அபூர்வ சக்தி மிக்கவராக இருக்கிறார். இந்த சன்னதியில் பிரசாதமாக ‘திருநீறு’, தீர்த்தம், துளசி வழங்கப் படுகிறது.இது வித்தியாசமாக படுகிறது.விசாரித்ததில், இங்கு யாகம் வளர்த்த இடம் என்கிறார்கள். அதனால் திருநீறு வழங்கப் படுகிறது என்கிறார்கள். ராமாயணத்தில் லட்சுமணனுக்காக மூலிகை தேடி ஆஞ்சனேயர் வரும் வழியில் தாகத்திற்காக இங்கு இறங்கினாராம். ஆஞ்சனேயருக்காக அங்கிருப்பவர்கள் காத்துக் கொண்டிருந்தார்களாம்.இங்கு உள்ள தெப்பம் ஆஞ்சனேயருக்காக தோற்றுவிக்கப் பட்டது என்கிறார்கள். பட்டாஷேபிகத்திற்கு அப்புறம் ராமர், சீதை ஆஞ்சனேயருக்கு காட்சி கொடுத்தார்கள் என்பது வரலாறு.
அதற்கப்புறம் ஆஞ்சனேயர் இங்கிருந்து வரும் பக்தர்களுக்கு ‘அபய ஹஸ்த கோலத்தில் இருந்து பக்தர்களை ஆசிர்வதிக்கிறார்.
மற்றொரு சன்னதியில் ‘ராமர், சீதை, லட்சுமணன் பட்டாபிஷேகக் கோலம். கிழக்கு பார்த்த கோலம். அருகில் ஆஞ்சனேயர் இருக்கிறார். அற்புதமான சிலை அமைப்பு. அருமையான சன்னதி. அங்கு குங்குமம் பிரசாதமாக வழங்கப் படுகிறது.
இந்த வளாகத்தில் படிக்கட்டுகளுடன் கூடிய அழகிய தெப்பம் அமைந்திருக்கிறது. படிக்கட்டுகளின் பக்கங்களில் இரண்டு குகை போன்ற அமைப்புகள் இருக்கின்றன. பாதுகாப்பு காரணங்களால் மூடி வைக்கப் பட்டிருக்கின்றன
இந்த வளாகத்தில் தான் அன்னதானம் நடைபெறுகிறது.
அரசின் உத்தரவு படி தினம் ஐம்பது நபர்களுக்கு அன்னதானம் வழங்கப் படுகிறது.
அரசின் உத்தரவு படி தினம் ஐம்பது நபர்களுக்கு அன்னதானம் வழங்கப் படுகிறது.
அன்னதானத்தைப் பற்றி:
இங்கு அன்னதானம் சிறப்பாக செய்கிறார்கள்
அந்தப் பணியையும் கோவில் நிர்வாகம் செய்பவர்களே சேர்ந்து செய்ய வேண்டியதிருக்கிறது. அதற்கு அவர்கள் வரும் பக்தர்களை சேர்த்து கொள்ளலாம்.; இது எங்களது யோசனை.கூட்டத்தையும் கட்டுப்படுத்தி, கோவிலையும் நிர்வகித்து, பரிமாறுதலையும் அவர்களே செய்கிறார்கள். மிகவும் சிரமப் படுகிறார்கள்.
இந்த பதிவிற்காக எங்களால் நிறைய படங்கள் எடுக்கப் பட்டன. இந்த புகைபடங்களை எடுக்க உதவிய எனது மனைவி திருமதி உமாகாந்தி அவர்களுக்கும், எனது தங்கை புதல்வர்கள் (இரட்டையர்கள்) அருண் ஸ்ரீராமுக்கும், அஷோக் குமாருக்கும் எங்களது மனப்பூர்வ நன்றிகளும், வாழ்த்துகளும்.
மற்றும் செய்திகளும் புகைப்படங்களும் கீழ்குறிப்பிட்டுள்ள பதிவுகளில் இருந்து எடுத்திருக்கிறோம். அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றிகள். அந்த பதிவுகளையும் படித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
http://ramchel.blogspot.com/2010/08/krishnapuram-anjaneyar-temple.html
http://prtraveller.blogspot.com/2010/01/kadayanallur-anjaneya-temple.html
http://www.trinethram-divine.com/2011/08/anjaneyar-muthangi-alankaram.html
இந்த பதிவை கணினியில் ஏற்ற உதவிய, எங்களது தள மேம்பாட்டுக்கு நல்ல யோசனைகள், நல்ல விமர்சனங்கள் கூறும் திருமதி ரமாமணி அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றி.
மிக்க நன்றி.
மிக்க நன்றி.