நடைப்பயிற்சி பற்றி எனது மதிப்பிற்குரிய நண்பர் டாக்டர் எம்.கே.முருகானந்தன்
அவர்கள் கட்டுரையை அவரது அனுமதியுடன் எனது பதிவில் வெளியிடுகிறேன்.

கவிஞர்
திரு வதிரி சி ரவீந்திரனின் கவிதைத் தொகுப்பில் இருந்த நடைப்பயிற்சி பற்றிய ஒரு கவிதையை
மேற்கோள் காட்டி இந்த கட்டுரையை எழுதியிருக்கிறார். இந்த கட்டுரையை வெளியிட அனுமதித்த டாக்டர் எம்.கே.முருகானந்தன்
அவர்களுக்கு எங்கள் இதயங்கனிந்த நன்றிகளும், வாழ்த்துகளும்.
நட்புக்கு
எல்லையில்லை.
நடைப் பயிற்சி
என்பது சாதாரணமான அனைவரும் செய்யக் கூடிய பிரச்சனைகள்
அற்ற ஒரு உடற் பயிற்சியாகும். ஆனால் அதே நேரம் உடலுக்கு உச்ச நிலையில் நன்மைகளை அளிக்கக் கூடியது.
எந்த
வயதினரும், எத்தகைய உடல் நிலையினரும் எந்த நேரத்திலும் செய்யக் கூடிய ஒரு இலகுவான பயிற்சி.
தெருக்களில், மைதானங்களில், கடற்கரையில், கோயில்
வீதிகளில் என எங்குமே செய்யக் கூடியது. இவை
எதும் கிட்டாவிட்டால் வீட்டினுள் கூட சமாளித்துச் செய்யலாம். தொடர் மாடிவீடுகளின் மொட்டை மாடிகள் காற்றோட்டம்
கொண்ட மற்றொரு வசதியான இடமாகும்.
அதற்குப் பயிற்சி பெற வேண்டியதில்லை, ஆசிரியர்கள் வழிகாட்டிகள் எதுவுமே
வேண்டியதில்லை. நீங்களாகவே செய்யக் கூடியது.
அத்தோடு
எந்த ஆபத்தும் அற்ற பயிற்சி எனவும் சொல்லலாம்.
இதனால் உடல் நலத்திற்கு பல நன்மைகள் கிட்டுகின்றன.
·
குருதியில்
உள்ள கெட்ட கொலஸ்டரோல் ஆன Lower low-density lipoprotein (LDL) னைக் குறைக்க உதவுகிறது.
·
குருதியில்
உள்ள நல்ல கொலஸ்டரோல் ஆன Raise high-density lipoprotein (HDL) லை அதிகரிக்க உதவுகிறது.
·
பிரஷர்
எனப்படும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க இது அவசியம்
·
நீரிழிவு
வராமல் தடுப்பதற்கும், ஏற்கனவே நீரிழிவு இருந்தால் அதைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு
வருவதற்கும் நிறையவே பங்களிக்கிறது.
·
அதிகரித்த
எடையைக் குறைக்கவும், எடை அதிகரிக்காமல் தடுக்கவும் நடைப் பயிற்சி மிகவும் நல்லது.
·
மனதில்
அமைதியையும் சாந்தத்தையும் கொண்டு வரவும் உதவும்.
·
உடல்
உறுதியாகவும் நலமாகவும் இருக்க இதைவிட சுலபமான பயிற்சி எதுவும் கிடையாது.
அண்மையில் வதிரி சி. ரவீந்திரனின்
‘மீண்டு வந்த நாட்கள்‘
கவிதைத் தொகுதியைப் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது. இதில் ஒரு
கவிதை நடத்தல் பற்றியதாகும்
தொடர்ந்து எப்படி நடப்பர் என்பதை
இனிதே சொல்கிறார்.
வேறென்ன
செய்வர்..
தொடர்ந்து சொல்கிறார்
கவிதை இவ்வாறு நிறைவுறுகிறது.
“..முதிர்ச்சி என்பது மனதினில் தெரியும்.
நடையினில் இல்லை.” என்கிறார்.
பல நல்ல கவிதைகளை இலகுவான தமிழில் வாசகனிடம் கொண்டு செல்லும் நல்ல
கவிதைத் தொகுப்பாகும்.
அருமையான கவிதை.
இருந்த போதும் அக் கவிதையின் இறுதி வரியுடன் கருத்து ரீதியாக எனக்கு
உடன்பாடு இல்லை.
“நடத்தல்
என்பது பயணத்தின் இறுதிப்படியே” என்கிறார்.
அல்ல.
அது நலமான உறுதியான மகிழ்ச்சியான வாழ்வுக்கான
முதற்படி என்பேன்.
அதனால்
தான் இப்பொழுது நடப்பவர்களில் பலர் முதியவர்கள் அல்ல. பெரும்பாலானவர்கள் நடுத்தர வயதினரும்
இளைஞர்களும் கூட.
ஆம். நடைப் பயிற்சி அனைவருக்குமானது. நலமான
உடலைக் கொடுக்கும்.
இனிமையான கவிதையையும், இதைப் போன்ற பல கவிதைகளையும் கொடுத்த நண்பர் வதிரி
சி. ரவீந்திரன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
இந்த கட்டுரையை படித்து உங்கள் கருத்துகளை பின்னூட்டப் பெட்டியில் (Commentary Box) பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்த பதிவின் link களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி படிக்க சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன். இதன் link ஐ மற்ற திரட்டிகளில் இணைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
Google Connect இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் Dash Board க்கு எங்கள் பதிவு வந்து விடும்.
உங்கள் மின்னஞ்சல் முகவரியினை அதற்கான கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் inbox க்கு வந்து விடும்.
மிக்க நன்றி.

