சனி, செப்டம்பர் 29, 2012

என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ்


எனது முகநூல் நண்பர்  Ramkumar G Krish அவர்கள் “யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்!!!” என்று ஒரு பதிவு எழுதியிருக்கிறார். நண்பர் இருப்பது ஆப்பிரிக்காவில்.  அவரது அனுமதியின் பேரில் இந்த பதிவை எனது பதிவில் வெளியிடுகிறேன்.


அதற்கு முன் எனது சில வார்த்தைகள்:

எனக்கு தமிழ் தட்டச்சு கற்றுக் கொடுத்தது இலங்கை முகநூல் நண்பர் திரு Kannan Sandralingam,


அவர் திரு Dr Mutthiah Kathiravetpillai Muruganandan, கொழும்பு அவர்களது நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.


இலங்கை திருமதி Kalaimahel Hidaya Risvi அவர்களும் எனது முகநூல் நண்பர்.



.  இலங்கை திரு Peer Mohamed Puniameen அவர்களும் எனது முகநூல் நண்பர்.


இந்த மூவரும் இலங்கையின் சிறந்த எழுத்தாளர்கள்.  இவர்களது கட்டுரைகளை அவர்களது அனுமதியின் பேரில் வெளியிட்டிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறேன். 

இன்னுமொரு முகநூல் நண்பர் Malini Shravan அற்புதமான திறமை படைத்தவர், இலங்கைத் தமிழை அற்புதமாக கையாள்கிறார்.  இவரது பதிவுகளும் எனது பதிவில் வெளியிட்டிருக்கிறேன்.

எனவே இலங்கைத் தமிழ் பற்றிய நமது தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் எழுதிய பதிவை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நன்றி நண்பர்களே, இனிமேல்  Ramkumar G Krish 

இலங்கை உலகிலுள்ள மிக பழமை வாய்ந்த நிலப்பகுதிகளில் ஒன்றாகும்.  இந்திய பாறைத்தட்டின் (Indian tectonic plate ) மத்தியில் அமைந்துள்ளதால் எரிமலை,  நிலநடுக்கம் போன்றவை இலங்கையை அனேகமாக பாதிப்பதில்லை.  இதன் 90% ஆன நிலப்பரப்பு 2 பில்லியன் காலத்துக்கு முந்தைய பாறைதொடர்களில் அமைந்துள்ளது. மேலும் இந்த பாறைத் தொடர்களின் நடத்திய ஆராச்சிகளின் விளைவாக இந்தியத் துணைக்கண்டம் முன்பு குமரிக்கண்டமெனும் (லெமுரியா) பெரியதோர் தென்நிலக் கண்டத்தின் பாகமாகவிருந்தது அறியப்படுகிறது.  ஆனால் சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உலகின்,  பூமியின் உள்ளே ஏற்பட்ட அழுத்தங்கள்  காரணமாக இந்த பெரிய  கண்டம் பிளவு படத தொடங்கியது. பின்னர் 45 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிளவுபட்ட இந்திய கண்டம் ஆசிய கண்டத்துடன் (Eurasian plate ) மோதி இமயமலைச்சாரல் எற்பட்டது.   இது இன்னமும் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளது. இதையெல்லாம் ஜியாலஜி சம்பந்தப்பட்ட புத்தகம் படித்தால் புரிந்துகொள்ள முடியும்.

இலங்கை, இந்து மகா சமுத்திரத்தில்  அமைந்துள்ள ஒரு அழகிய தீவாகும்இது இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து மன்னார் வளைகுடாவினால் (Gulf of  Mannar)  துண்டிக்கப்பட்டுள்ள போதும், இதன் அமைவு இந்திய பாறைத்தட்டிலேயே உள்ளது.  இராமர் அணை (Adam's bridge) எனப்படும் நிலத்துண்டம், இலங்கையை இந்தியத் தலை நிலத்துடன் மத்தியகாலம் வரை இணைத்திருந்தது.  இது 1480 ஆம் ஆண்டளவில் ஏற்பட்ட சூறாவளியில் ஊடறுக்கப்பட்டு, தற்போது இடையிடையே சுண்ணாம்புக் கற்பாறை தீவுத்தொடர்களைக் கொண்டவோர் மிகவும் ஆழம் குன்றிய நீர்ப்பரப்பாகவே காணப்படுகிறது.

இலங்கை மலைசார்ந்த மழைக்காடுகளாக காணும்  காட்டுப் பிராந்தியங்களும் இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளோடு  (Western Ghats) நெருங்கிய தொடர்புள்ளவையாக காணப்படுகின்றன.  இப்படியெல்லாம் படித்த, கேட்டு வந்த இலங்கை பற்றி, மேலும்  பள்ளி  வயதில், பொன்னியின் செல்வன் படிக்கும்போது, வந்தியத் தேவன், பூங்குழலி, அருண் மொழி   வரும்போதெல்லாம் அமரர் கல்கி அவர்கள்,  தன் எழுத்தோட்டம் வாயிலாக, இலங்கையை வர்ணிப்பார், கண் முன்னே நிறுத்துவார். கல்லூரி நாட்களில் உடன் படித்த இலங்கைத் தமிழ் நண்பர்களான மதி அமுதன்,  தயாளன்,  வைகுண்ட நாதன்,  முரளி  மற்றும் இலங்கைத் தமிழ் நண்பர்களோடு பேசும் போது, அவர்கள் பேசும் தமிழ் என்னை ஈர்த்ததுண்டு.  கவனித்துப் பார்ப்பேன்,  நாம் தொலைத்து விட்ட தமிழ் வார்த்தைகள் (கதைத்தல் போன்ற) அவர்கள் உரையில் காணலாம். கேட்டாலே எரிச்சல் மூட்டும் மெட்ராஸ் பாஷை கலக்காத அழகுத் தமிழ், இலங்கைத் தமிழ் என்றும் நான் பலமுறை நினத்ததுண்டு.

இந்த ஆவலை பூர்த்தி செய்யும் வண்ணமாக இலங்கை தமிழை எழுத முயற்சிக்கிறேன்  விக்கிபீடியா உதவியோடு.  சற்றே உள் நுழைவோம்

பாரதி அப்போதே பாடிவைத்தார்அது மிகவும் உண்மையே...
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்............
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல்வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்லுவதிலோர் மகிமை யில்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்."

உலகில் ஆறு மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ், மற்றும் சமஸ்கிருதம்.  இந்த ஆறு மொழிகளில் நான்குமொழிகள் இன்று வழக்கில் இல்லை.  இன்றளவிலும் உலகளவில் பேசப்படும் இலக்கிய, வரலாற்று வளம் மிக்க மொழி தமிழ் மொழி என்பதில் வியப்பில்லை.

தமிழ், வேறு பல மொழிகளைப் போல பேச்சுத் தமிழ், எழுத்துத் தமிழ் என இரு வடிவங்களைக் கொண்டுள்ளது.  எழுத்துத் தமிழ்,  உலகில் தமிழ் வாழும் எல்லாப் பகுதிகளிலும் ஏறத்தாழ ஒன்றுபோலவே, வேறுபாடுகள் அதிகம் இன்றி உள்ளது.  ஆனால், பேச்சுத் தமிழ், இடத்திற்கு ஏற்றார் போல, குறிப்பிடத்தக்க வேறுபாடுகளுடன் பழகுவதை கவனித்து இருக்கலாம். இத்தகைய மொழியினை, வட்டார மொழி வழக்குகள் என்பர்.  இலங்கையின் வட பகுதியில் பெரும்பான்மையாகத் தமிழர் வாழும் பகுதியான யாழ்ப்பாணப் பகுதியில் பேசப்படும் தமிழே யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ் என அழைக்கப்படுகின்றன.

தமிழை அதிகளவில் பேசும் மக்கள் தொகை கொண்ட தமிழகம் சில மைல்கள் தொலைவிலேயே அமைந்திருந்த போதும், யாழ்ப்பாணத்தில், யாழ்ப்பாண தமிழர்கள் பேசும் தமிழ், குறிப்பிடத்தக்க, தனித்துவம்  கொண்ட  பேச்சுத் தமிழாக  உருவானதற்கு, அரசியல் மற்றும் வரலாற்று அம்சங்களே காரணமாகும்.
தமிழ் ஒலிகளைக் குறிக்கும் எழுத்துக்களுக்கான உச்சரிப்புகள் இன்னதுதான் என வரையறுக்கப்பட்டு இருந்தாலும், பேச்சுத் தமிழில் அவற்றின் உச்சரிப்புகள் பல வேறுபாடுகளை அடைவதை கவனிக்கலாம்.  யாழ்ப்பாணத்துத் தமிழில் இந்த உச்சரிப்புகள் எந்த அளவுக்கு சரியான விதிகளுக்கு அமைய உள்ளன என்பதைக் கருதும்போது கவனத்துக்கு வரும் அம்சங்கள் சில பின்வருமாறு.

§  யாழ்ப்பாணத்தவர்  கரத்தைச் சரியாக உச்சரிப்பதில்லை. இங்கே  கரமும்கரமும் ஒன்றுபோலவே உச்சரிக்கப்படுகின்றன. வாழை க்கும்வாளை க்கும் யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழில் உச்சரிப்பு வேறுபாடு கிடையாது. (தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இதே உச்சரிப்புத்தான் உச்சரிக்கப்படுகிறது).
§  யாழ்ப்பாணத்தவர் பேசும்போது  கர -  கர கர -  கர, மற்றும்  கர - கர வேறுபாடுகள் மிகவும் தெளிவாக இருக்கும்.
§   கர மெய் இரட்டித்து வரும்போது யாழ்ப்பாணத்து உச்சரிப்பு வடதமிழ்நாட்டு உச்சரிப்புடன் ஒத்து அமைவதில்லை. வடதமிழகத்தில் ற்றற்றி .... என்பன t-rat-ri என உச்சரிக்கப்படும்போது, தென்தமிழகத்தில் குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைப் போல யாழ்ப்பாணத்தில் t-tat-ti என உச்சரிக்கப்படுவதாய் சொல்லப் படுகிறது.

சொற்கள்
பொதுவாக, எல்லா நாட்டு மக்களின் பேச்சு மொழி, எழுத்து மொழிக்கு  சற்றே வித்தியாசப்படும்.  அது போலவே, பேச்சுத் தமிழில் சொற்களும் பல விதமான மாற்றங்களுக்கு உள்ளாகின்றன.  சில சொற்களைக் குறுக்கி ஒலிப்பதும், சிலவற்றை நீட்டி ஒலிப்பதும், சிலவற்றின் ஒலிகளை மாற்றி ஒலிப்பதும் சாதாரணமாகக் காணக்கூடியதே. யாழ்ப்பாணத் தமிழும் இதற்கு விதிவிலக்கல்ல.  எனினும் சொற்களை உச்சரிப்பதில் யாழ்ப்பாணத் தமிழில் ஒப்பீட்டு ரீதியில் குறைவான திரிபுகளே இருப்பதாகக் கூறலாம்.  தமிழ்நாட்டுப் பேச்சுத் தமிழுடன் ஒப்பிட்டு நோக்குவது இதனைப்புரிந்து கொள்ள உதவும்.

எடுத்துக்காட்டாக:

§  ன்ம் போன்ற மெய்யெழுத்துக்களில் முடியும் பல சொற்களை உச்சரிக்கும்போது, இந்த எழுத்துக்களை முழுமையாக உச்சரிக்காமல், ஒரு மூக்கொலியுடன் நிறுத்துவது தமிழ்நாட்டில் பரவலாகக் காணப்படுகின்றது. நான் என்பதை நா.  என்றும்மரம் என்பதை மர.  என்றும் உச்சரிப்பதைக் காணலாம்.  நான் என்பதைச் சில சமயங்களில் நானு என்று நீட்டி உச்சரிக்கும் வழக்கமும் உண்டு.  யாழ்ப்பாணத்தில் இச் சொற்களை நான்மரம் என்று முழுமையாக உச்சரிப்பார்கள்.

§  கர, கரங்கள் தனியாகவோ, உயிர்மெய்யாகவோ சொல் முதலில் வருகின்றபோது, தமிழ் நாட்டில் பல இடங்களில், அவற்றை முறையே கர, கரங்களாக உச்சரிப்பார்கள். எடுத்துக்காட்டாகஇடம்எடம் எனவும்குடம், கொடம் எனவும் ஆவதைப் பார்க்கலாம்.  இந்த உச்சரிப்புத் திரிபும் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் இல்லை.

எனினும் ஒலிகள் திரிபு அடைவது யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் இல்லாதது அல்ல.  இதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.  பல சொற்களில்  கரம் கரமாகத் திரிபு அடைவதுண்டு.

ஒன்று என்பது ஒண்டு என்றும்வென்று என்பது வெண்டு என்றும் திரியும். இது போலவே கன்றுபன்றிதின்று என்பவை முறையே கண்டுபண்டி, திண்டு என வழங்குவதை உற்று நோக்கலாம்.

வினைசொற்கள் கையாளும் விதம்
யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் நான்கு வகையான பேச்சு வகைகள் உள்ளன. அவற்றை மரியாதை மிகு பேச்சு வகைஇடைநிலை பேச்சு வகை,  சாதாரண பேச்சு வகை,  மரியாதை அற்ற பேச்சு வகை என வகைபடுதுகின்றனர் மொழி வல்லுனர்கள்.
இதில் மரியாதை மிகு வகை என்பது  "வாருங்கள் அல்லது வாங்கோ", "சொல்லுங்கள் அல்லது சொல்லுங்கோ" என்று பன்மையாக பேசப்படும் வகையாகும்.  இடைநிலை பேச்சு வகை என்பது "வாரும்", "சொல்லும்" என பேசப்படும் வகையாகும்.  சாதாரண பேச்சு வகை "வா",  "போ",  "இரு" போன்று பேசப்படும் வகையாகும்.
மரியாதை அற்ற பேச்சு வகை "வாடா", "சொல்லடா" என மரியாதையற்ற பயன்பாடாகும்.  இந்த மரியாதை அற்ற சொற்கள் நண்பர்களிடையேயோஇளைய சகோதரர்களிடம் பெரியவர்களாலோகுழந்தைகளிடம் பெற்றோராலோ, சிறியவர்களிடம் பெரியவர்களாலோ பயன்படுத்தப்படும்.  சிறியவர்களாக இருந்தாலும் பெரியவர்கள் அவர்களிடம், "வாங்கோசொல்லுங்கோ"  போன்ற மரியாதையான சொற்களைப் பயன்படுத்தும் முறையும் உள்ளது. அதேவேளை கோபத்தில் பேசும்போதும் பேசப்படுவதுண்டு.

இவற்றில் "இடை நிலை பேச்சு வகை" யாழ்ப்பாணத் தமிழரிடம் மட்டுமே காணப்படும் ஒரு தனிச்சிறப்பாகும்.  இந்த இடைநிலை பேச்சு வகை தமிழ்நாட்டு பழைய  சரித்திர  திரைப்படங்களில் காணப்பட்டாலும் தற்போது பெரும்பாலும் மறைந்து விட்ட நிலை என்றே உருவாகியுள்ளது.  இந்த இடைநிலை பேச்சு வகை நண்பர்களிடையேயும்சமவயதினரிடையேயுமே அதிக வழக்கில் உள்ளது. சில சமயங்களில்  வயதில் பெரியவர்கள் வயது குறைந்தவர்களையும்தொழில் நிலைகளில் உயர்நிலையில் இருப்போர் மக்களையும் பேசும் இடங்கள் உள்ளன.  சிலநேரங்களில் இருவருக்கு இடையில் ஏற்படும் கருத்து முரண்பாட்டின் போது கோபத்தின் வெளிப்பாடாக மரியாதையை குறைத்து; "நீர்", "உமது", "உமக்கு" எனச் சுட்டுப்பெயர்கள் வடிவிலும் "இரும்",  "வாரும்",  "சொல்லும்",  "கேளும்", "கதையும்",  "என்ன சொன்னீர்?"  என வினைச் சொற்கள் வடிவிலும் பேச்சு வெளிப்படும் இடங்களும் உள்ளன.

உறவுமுறை யாழ்ப்பாணத்து பேச்சுத்தமிழ்  வளம்

யாழ்ப்பாணத்துப் பேச்சுத்தமிழில் புழங்கும் சொற்கள் பல தமிழகத்துச் சொற் பயன்பாடுகளிலிருந்து வேறுபட்டவையாக உள்ளன.  பல அன்றாடப் பயன்பாட்டுச் சொற்களும் இவற்றுள் அடக்கம்.  ஒரு சமுதாயத்தின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டையும் பிரதிபலிப்பதாகக் கூறப்படும் உறவுமுறைச் சொற்கள் யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் எப்படி அமைகின்றன என்பதைப் பார்க்கலாம்.  எழுத்துத் தமிழில் கணவன் மனைவி என்ற சொற்களுக்கு ஈடாகயாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் புருசன், பெண்சாதி என்ற சொற்கள் பயன்படுகின்றன.  1707 ஆம் ஆண்டில் தொகுக்கப்பட்ட தேச வழமைச் சட்டத்திலும் இச்சொற்களே கையாளப்பட்டுள்ளன.

பெற்றோரையும் பிள்ளைகளையும் கொண்ட தனிக் குடும்பம் ஒன்றில் உள்ள உறவுகள்தாய்தந்தைஆண் பிள்ளைகள்பெண் பிள்ளைகள் என்பவர்களாகும்.  இவர்களை அழைக்கப் பயன்படும் விளிச் சொற்களும் அவர்கள் பற்றிப் பிறருடன் பேசும்போது பயன்படுத்தும் குறிப்புச் சொற்களும் ஒரு பேச்சு மொழியின் அடிப்படையான சொற்களாகும். தற்காலத்தில் யாழ்ப்பாணத்துப் பிள்ளைகள் தந்தையை அப்பா என்றும்தாயை அம்மா என்றும் அழைக்கிறார்கள். இன்று வாழும் மூத்த தலைமுறையினரில் பலர்இவர்களை முறையேஅப்புஆச்சி என அழைத்தனர்.  இடைக் காலத்தில் தந்தையை ஐயா என்று அழைக்கும் வழக்கமும் இருந்தது. அக்காலத்தில்பெற்றோரின் பெற்றோரைபெத்தப்புபெத்தாச்சி, அம்மாச்சிஅப்பாச்சிஆச்சி என்றார்கள்.  இன்று அவர்கள் அம்மம்மாஅப்பம்மா, அம்மப்பாஅப்பப்பா,  (சில வீடுகளில் தாத்தாபாட்டி எனவும்) என அழைக்கப்படுகிறார்கள்.  இதுபோலவே பெற்றோரின் உடன் பிறந்த ஒத்தபாலாரும், சில பத்தாண்டுகளுக்கு முன்வரைபெரியப்புசின்னப்புபெரியாச்சிசின்னாச்சி, குஞ்சையாகுஞ்சம்மா என்றும் பின்னர் பெரியையாசின்னையா என்றும் அழைக்கப்பட்டுஇன்றுபெரியப்பாசித்தப்பாபெரியம்மாசின்னம்மா அல்லது சித்தி என்ற உறவுப்பெயரிட்டு அழைக்கப்படுகிறார்கள்.
பால் வேறுபாடின்றிப் பிள்ளைகளைக் குறிக்கும்போதுபிள்ளை என்ற சொல்லே பயன்படுகின்றது.  ஆண் பிள்ளையை ஆம்பிளைப் பிள்ளை என்றும், பெண் பிள்ளையைப் பொம்பிளைப் பிள்ளை என்றும் குறிப்பிடுவது அங்குள்ள பேச்சுத்தமிழ் வழக்கு.  ஆம்பிளை என்பது ஆண்பிள்ளை என்பதன் திரிபு.  அதுபோலவேபொம்பிளை என்பது பெண் பிள்ளை என்பதன் திரிபு. எனினும் தற்காலத்தில்ஆம்பிளை என்பதும்பொம்பிளை என்பதும்ஆண்பெண் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டு வருவதால்பிள்ளைகளைக் குறிக்கும் போதுஇன்னொரு பிள்ளைஎன்ற சொல்லையும் சேர்க்கவேண்டி ஏற்பட்டது.  உறவுச் சொற்களாக வழங்கும்போது, ஆண்பிள்ளையை மகன் என்றும், பெண் பிள்ளையை மகள் என்றுமே வழங்குவர்.  யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில்இச்சொற்களை விளிச்சொற்களாகவும் பயன்படுத்தி வந்தாலும்பல குடும்பங்களில்ஆண்பிள்ளையைத் தம்பி என்றும், பெண்பிள்ளையை தங்கச்சிஅல்லது பிள்ளை என்றும் அழைப்பது வழக்கம்.
பிள்ளைகள் தங்களுக்குள் பயன்படுத்திக் கொள்ளும் உறவு முறைச் சொற்கள்அண்ணன்அக்காதம்பிதங்கச்சி என்பனவாகும்.  மேற்சொன்ன உறவுகள் ஒன்றுக்கு மேற்பட இருக்கும்போதுபெரியசின்னஇளையஆசைசீனி போன்றவற்றில் பொருத்தமான ஒரு அடைமொழியைச் சேர்த்துபெரியண்ணன்ஆசைத்தம்பி, சின்னக்கா என்றோஅவர்களுடைய பெயரைச் சேர்த்துசிவா அண்ணாவாணியக்கா என்றோ வேறுபடுத்தி அழைப்பது வழக்கம்.

தந்தையின் உடன் பிறந்தாளைஅத்தை என்று அழைக்கும் வழக்கம் யாழ்ப்பாணத்தில் மிகவும் குறைவு.  தந்தையோடு பிறந்த பெண்களையும்தாயோடு பிறந்த ஆண்களின் மனைவியரையும்மாமி என்றே அழைப்பது இவ்வூர் வழக்கம். எனினும்பழைய தலைமுறையினர்தாயோடு பிறந்த ஆணை அம்மான் என்றும்தந்தையுடன் பிறந்த பெண்ணின் கணவரை மாமா என்றும் குறிப்பிட்டனர்.  இன்று அம்மான் என்ற சொல் கைவிடப்பட்டு,  மாமா என்பதே இரு உறவுக்கும் பயன்படுகின்றது.
மனைவி கணவனை  'இஞ்சாருங்கோ', அல்லது  'இஞ்சாருங்கோப்பா' என்றும், கணவன் மனைவியை பெயரைச் சொல்லியோ அல்லது 'இஞ்சாருமப்பா' என்றுமோ அழைத்து வந்தனர்.  தற்போது வாழும் மூத்த தலைமுறையினர் தற்போதும் இப்படி ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்வதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.  இளம் வயதினரில்கூட, மனைவி கணவனை  'அப்பா'  என்று அழைப்பது தற்போதும் வழக்கத்தில் உள்ளது.  அனேகமாக குழந்தை பிறந்த பின்னர், குழந்தைக்கு 'அப்பா' என்று சொல்லிக் கொடுத்துக்கொண்டு வருவதனால் இம்முறை தோன்றியிருக்கலாம்.  தற்போது அனேகமாக கணவன் மனைவியை பெயரிட்டு அழைப்பதே வழக்கத்தில் உள்ளது.  மனைவியும் கணவனை பெயரிட்டு அழைப்பதும் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. திருமணமான புதிதில் மனைவி கணவனை அத்தான் என்று அழைக்கும் வழக்கமும் ஒரு காலத்தில் இருந்தது.  ஆனால் இவ்வழக்கம் தமிழகத்துப் பழைய திரைப்படங்களில் இருந்து பெறப்பட்டிருக்கலாம்.  அக்காவின் கணவரை அத்தான் அல்லது மைத்துனர் என்றும்தங்கையின் கணவரை மச்சான் என்றும்அண்ணாவின் அல்லது தம்பியின் மனைவியை மச்சாள் என்றும் அழைத்தனர்.  அண்ணி என்ற சொல் மிக அரிதாகவே யாழ்ப்பாணத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது.  மேலும் மாமா, மாமியின் மகனை மச்சான் என்றும்அவர்களின் மகளை மச்சாள் என்றும் அழைக்கும் வழக்கமும் இருந்து வந்தது.

யாழ்ப்பாணத்துக்குச் சிறப்பான சொற்கள்
யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கில் பயன்படுகின்ற சொற்கள் பல அப்பகுதிக்கேயுரிய சிறப்பான பயன்பாடுகளாக அமைகின்றன.  இவ்வாறான சொற்களில் சிலவற்றைக் கீழே காணலாம்.

பேச்சுத் தமிழ் (பொருள்)
ஆம்பிளை (ஆண்)
இளந்தாரி (இளைஞன்)
ஒழுங்கை (ஒடுங்கிய தெரு)
கதிரை (நாற்காலி)
கமம் (விவசாயம்/வயல்)
கமக்காரன் (விவசாயி)
காசு (பணம்)
காணி (நிலம்)
கொடி (பட்டம்)
சடங்கு (விவாகம்)
திகதி (தேதி)
பலசரக்கு (மளிகை)
பெட்டை (சிறுமி)
பெடியன் (சிறுவன்)
பேந்து/பிறகு (பின்பு)
பொம்பிளை (பெண்)
முடக்கு (பாதைத் திருப்பம்)
வளவு (வீட்டு நிலம்)
வெள்ளாமை (வேளாண்மை)
-
கதை (பேசு)
பறை (பேசு)
பாவி (பயன்படுத்து)
பேசு (ஏசு)
விளங்கு (புரிந்துகொள்)
வெளிக்கிடு (புறப்படு/உடை அணிந்து தயாராகு)
ஆறுதலா (மெதுவாக)
கெதியா (விரைவாக)

பிறமொழிச் செல்வாக்கு
யாழ்ப்பாணம், 1591 ஆம் ஆண்டிலிருந்து, 1620 வரை போர்த்துக்கீசியரின் செல்வாக்கின் கீழும், 1620 தொடக்கம் 1658 வரை அவர்களின் நேரடி ஆட்சியிலும் இருந்தது.  யாழ்ப்பாணத்துடன் தொடர்பு கொண்ட முதல் மேல் நாட்டவர் இவர்களே ஆனதால், பல மேல் நாட்டுப் பொருட்களும்கருத்துருக்களும் யாழ்ப்பாணத்தில் அறிமுகமானது இவர்கள் மூலமேயாகும்.  இவற்றுடன் போர்த்துக்கீசிய மொழிச் சொற்கள் சிலவும் யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் கலந்துள்ளன. உதாரணமாக,  அலமாரிஅன்னாசி, பீங்கான்கடுதாசிகோப்பை முதலான வார்த்தைகள் தமிழ் நாட்டில் போர்த்துக்கீசியர் செல்வாக்கு மிகவும் குறைவாகவே இருந்தனால்யாழ்ப்பாணத்தைப்போல்தமிழ் நாட்டுப் பேச்சுத் தமிழில் போத்துக்கீசிய மொழிச் சொற்கள் அதிகம் ஊடுருவவில்லை.
நெதர்லாந்து நாட்டு மக்களே, 138 ஆண்டுகள் யாழ்ப்பாணத்தை முழுமையாக ஆண்டபோதிலும்போர்த்துக்கீசியச் சொற்களைப் போல்டச்சு மொழிச் சொற்கள் யாழ்ப்பாணத் தமிழில் அதிகம் இடம் பெறவில்லை.  எனினும்சில டச்சுச் சொற்கள் இன்னும் இங்கே புழக்கத்தில் இருந்துதான் வருகின்றன.  கக்கூசு (கழிப்பறை) கந்தோர் (அலுவலகம்) காமரா அல்லது காம்பறா (அறை)தேத்தண்ணி (தேநீர்) போன்ற சொற்கள் டச்சு மொழியிலிருந்து வந்தவையாகும்.
இது போன்றே, ஆங்கிலேயர் காலத்தில் வந்த பேச்சுத்தமிழ் இன்றும் தொடர்கிறது.  உதாரணமா, பஸ், டயர், இன்னும் பிற.
நம்  இலங்கை வாழ் நண்பர்கள் இக்கட்டுரையில் குறை இருப்பின் மன்னிக்கவும்.  மேலும், விடுபட்ட உங்கள் புழக்கத்தில் இருக்கும் தமிழ் வார்த்தைகளை மற்றவர்களோடு பகிருங்கள்.
"சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் "...
 (Thanks: Wikipedia)

இனிய நண்பர்களே,
இது சற்று பெரிய பதிவு.  படித்து உங்கள் பின்னூட்டங்களையும் பதியும்படி கேட்டுக் கொள்கிறேன்.  திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இந்த பதிவை பகிர அனுமதித்த Ramkumar G Krish அவர்களுக்கு எனது மனப்பூர்வ நன்றி.
நன்றி நண்பர்களே.

i

i

i




































செவ்வாய், செப்டம்பர் 25, 2012

திரு சொல் கேளான் கிரியை சந்தித்தோம் – அவர் ஒரு பலாப்பழம்


இனிய நண்பர்களே,

எங்களது முகநூல் நண்பர் திரு சொல் கேளான் கிரி அவர்களை சிவகாசியில் நாங்களும் முகநூலில் எங்களுக்கு கிடைத்த எங்கள் அருமை மகன் ராம்குமாரும் சந்தித்தோம்.  அது பற்றிய பதிவு.  உங்களது கருத்துக்களை பதியுங்கள்.  உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.  திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன்.


திரு சொல் கேளான் கிரியை friend request கொடுத்து நான் அவரது நண்பனானேன்.  அவரது நிலைத்தகவல்கள், அவரது கருத்துக்கள், அவரது விமர்சனங்கள்  எனக்கு மிகவும் பிடித்திருந்தன.  சிவகாசி ஒரு திருமண வீட்டுக்கு வருவதாக தகவல் எழுதியிருந்தார்.  சிவகாசி என்றவுடன், எந்த திருமணத்திற்கு என்று தகவல் கேட்டேன்.  அவர் சொன்ன மணவீடும், நாங்கள் செல்லவிருக்கும் மண வீடும் ஒன்று தான், திருமண வீட்டில் காலையில் சந்திக்கிறேன் என்று தகவல் சொன்னேன்.  அதற்கு அவர் முந்தைய நாள் நிச்சயதார்த்திற்கு இருந்து மறு நாள் காலையில் சென்னை மெரினா பீச்சில் இலங்கைத் தமிழர்களுக்காக மெழுகு வர்த்தி ஏற்றும் நிகழ்ச்சியில் கிளம்புவதாக சொன்னார்.  அவரது கொள்கைப் பிடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  மறு நாள் திருமண வீட்டில் சென்று விசாரித்தேன்.  அவர் எங்களது நெருங்கிய உறவினர் என்று தெரிந்தது; அவரும் உறுதி செய்தார்.

நண்பரின் கவிதைகளைப் பற்றி திரு சுஜாதா அவர்கள் அவரது “கற்றதும் பெற்றதும்” பகுதிகளில் ஒரு தடவைக்கு மேல் குறிப்பிட்டிருக்கிறார், எனக்கு அவர் மேல் உள்ள மதிப்பு இன்னும் கூடியது.

தினமலரில் பின் அட்டையில் அவரது கவிதை வெளியானது.  தினமலரில் கடைசிப் பக்கத்தில் வந்தால் பொதுவாக கவிதை நன்றாக, பொருள் பொதிந்ததாக இருக்கும்.  அவரது கவிதையை தட்டச்சு செய்து, அவரது படத்துடன் எனது பக்கத்தில் வெளியிட்டேன்.  அவருக்கு மிகவும் மகிழ்ச்சி.  (இது எல்லோருக்கும் நான் செய்வது தான், நல்ல செய்திகள் எங்கிருந்தாலும் தேடிப் பிடித்து வெளியிடுவேன், அவர்கள் எனக்கு தெரியாதவர்களாகவும் இருப்பார்கள்).  அவரது  தொலைபேசி எண் கொடுத்தார், எனது எண் வாங்கிக் கொண்டார்.  பின்பு என்னைக் கூப்பிட்டு பேசினார், அவ்வளவு பாசத்துடன் பேசினார், பேச்சில் அவரது இனிமை.  சென்னை வரும் போது அவரது தாம்பரம் வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.  அவரது புத்தகங்களை அனுப்பி வைப்பதாகவும், எனது அஞ்சல் முகவரி அனுப்பும்படி கேட்டார்.  நானும் அனுப்பி வைத்தேன்.


நாட்கள் கடந்தன; மறந்து விட்டார் என நினைத்தேன்.  ஒரு நாள் கூரியரில் அவரது கீழ் கண்ட 5 புத்தகங்கள் வந்தன.

நெஞ்சம் மறப்பதில்லை
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
சிரித்து வாழ வேண்டும்
சிந்திக்க வேண்டுகிறேன்
சொர்க்கம் எப்போதும் நம் கையில்
எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.  உடனே தொலைபேசியில் புத்தகங்கள் வந்த தகவலை சொல்லி விட்டு, படித்து விட்டு தகவல் சொல்கிறேன் என்று சொன்னேன்.

மதியம் 3 மணியளவில் படிக்க ஆரம்பித்தேன்.  4 புத்தகங்களை ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.  நான் முகநூலில் செய்தி அனுப்பினேன்.  திரு சொல் கேளான் கிரி அவர்களின் புத்தகங்களிலிருந்து அவ்வப்போது செய்திகளை வெளியிடுகிறேன்; கொஞ்சம் கசப்பாக இருக்கும் (உண்மை கசக்கும்), எனவே மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் எழுதுங்கள், தனி மனிதத் தாக்குதல் இருக்கக் கூடாது என்று.


அவரது கருத்துக்களை எனது பக்கத்தில் போடும் போது நிறைய பின்னூட்டங்கள்; நிறைய நண்பர்கள் அவருக்கும் தொலைபேசியிலும், முகநூல் செய்திகளிலும் அவருக்கு தெரிவித்திருக்கிறார்கள்.  அதற்கப்புரம் தான் நான் வெளியிட்ட செய்திகளைப் பார்த்திருக்கிறார்.  எனக்கு போனில் பேசினார்; மிக்க மகிழ்ச்சி தெரிவித்தார். 

அவரது புத்தகங்களைப் பற்றி கருத்து கேட்டார்.  நான் அவருக்கு தனித்தகவல் கொடுத்தேன்.

ஐயா, உங்கள் புத்தகங்கள் வந்த உடன் தொடர்ச்சியாக 4 புத்தகங்களை படித்து முடித்து விட்டேன்.  நிறைய சிரித்தேன்; நிறைய அழுதேன்.  அருமையான புத்தகங்கள் என்றேன்.  (மிகவும் நெகிழ்ந்து விட்டேன்).

எனக்கு 10 செட் விலைக்கு கொடுக்க முடியுமாயின் விலை எவ்வளவு என்று சொல்லுங்கள், பணம் அனுப்பி வாங்கிக் கொள்கிறேன் என்றேன்.  அவர் இது விற்பதற்கு எழுதவில்லை.  நான் எனது வீட்டு விழாக்களில் வழங்குவதற்கு, நண்பர்கள் வற்புறுத்தலின் பேரில் எழுதினேன் என்றார்.

கூரியரில் அனுப்புகிறேன் என்றார்.

இந்த மாத ஆரம்பித்தில் ஒரு நாள் தகவல் கொடுத்தார்; 3ம் தேதி கிளம்பி சிவகாசி வருவதாகவும், 5ம் தேதி காலையில் சிவகாசியில் 11 மணி அளவில் பார்க்க முடியுமா என்று கேட்டார், அன்று மதியம் 2 மணி ரயிலில் கிளம்பி குற்றாலம் செல்கிறேன் என்றார்.

நான் 5 காலை சீக்கிரம் வந்து விட்டு திரும்பி விடுகிறேன் என்றேன்.  வரும்  போது சிவகாசி நண்பர்கள் – திரு ராம் குமார், திரு வைரம் சிவகாசி அவர்களையும் உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன் என்றேன்.  அவர் சம்மதம் தெரிவித்தார்.

நானும் என் மனைவி திருமதி உமாகாந்தியும் 10.30 மணிக்கு வந்தோம்.  சிவகாசி பேருந்து நிலையம் அருகில் பாண்டியன் லாட்ஜில் தங்கி இருந்தார்; ரிசப்ஷனில் சொன்னோம்.  அவருக்கு போன் செய்தார்கள்.  எங்களை அறை எண் சொல்லி செல்ல சொன்னார்கள். 

ஆச்சரியம், எங்களை வரவேற்க அவர் கீழே வந்து விட்டார்; நாங்கள் ஒரு முதியவரை எதிர் பார்த்தோம்.  அருமையாக உடை அணிந்து,  இளைஞர் போல் நடையில் ஒரு வேகம், எங்களுக்கு தாங்க முடியாத ஆச்சரியம்.  50 வயதுக்கு மேல் மதிக்க முடியாது.  மனதில் இளமை, எனவே பார்ப்பதற்கு இளமையாக இருக்கிறார், நடையில் ஒரு துள்ளல்.

எங்களை அழைத்துச் சென்றார்.  அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.  பேசிக் கொண்டிருந்தோம்.  திரு ராம்குமாருக்கு போன் செய்தேன்.  வந்து கொண்டிருப்பதாக சொன்னார்.  திரு வைரம் சிவகாசி ஒரு அவசர நிகழ்ச்சி 11 மணிக்கு இருப்பதால் வர முடியவில்லை என்றார்.

திரு ராம்குமார் வந்தார், அவரை அறிமுகப் படுத்தினேன்.  திரு கிரி அவர்களுக்கு ஆச்சரியம், எப்படி இவ்வளவு இளைஞர்களை நண்பர்களாக வைத்திருக்கிறீர்கள் என்று.  எனது பதில்; இப்போது உள்ள இளைஞர்களின் சக்தி மகத்தானது, அவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.  எனக்கு முகநூல் அறிமுகப்படுத்தியது எனது அருமை மகன் ராஜவேல், கணினியில் தமிழ் இறக்கிக்  கொடுத்து, எப்படி “அழகி+” ஐ பயன் படுத்துவது திரு ராம் குமார் என்றேன்.  கணினி சம்பந்தமாக எதுவும் சந்தேகம் என்றால் ராம்குமாரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லி இவரது போன் எண் அவரிடம் வாங்கிக் கொடுத்தேன்.  ஒரு அருமையான சந்திப்பு.

திரு கிரி அவர்களும் சில நண்பர்களைப் பற்றி, அவர்கள் அருமையாக எழுதுகிறார்கள் என்றார்.  திரு உதயகுமார் (அவர் எனது நண்பர் தான்), செல்வி கண்மணி ராஜன் (பிறகு நண்பரானேன், திரு ராம்குமாருக்கு சொல்லி அவரும் நண்பரானார்), இன்னும் சில நண்பர்கள். 

திரு கிரி அவர்கள் 4 செட் புத்தகங்கள் கொண்டு வந்து அதில் கையெழுத்திட்டுக் கொடுத்தார்.  மிக்க மகிழ்ச்சி.

திரு கிரி அவர்கள் 20 வருடங்களாக பாண்டியன் லாட்ஜில் தான் தங்குவதாக கூறினார், நன்கு பராமரிக்கப் படுகிறது, வாடகையும் அதிகமாக இல்லை.  அருகில் பாலாஜி பவன் என அருமையான சைவ உணவு விடுதி இருக்கிறது.  சிவகாசி செல்பவர்கள் இந்த 2 இடங்களையும் பயன்படுத்தலாம்.  எங்களுக்கு இது வரை தெரியாது.

மதியம் சிவகாசிக்கு செங்கோட்டை ரயில் 1 மணிக்கு வரும், எனவே 12.30 மணிக்கு ரயில் நிலையத்தில் இருக்குமாறு கிளப்பி அனுப்பினோம்.  எங்களுடன் மதிய உணவு அருந்த முடியவில்லை என அவருக்கு மிகுந்த வருத்தம்.  அடுத்து நல்ல சந்தர்ப்பம் வரும்; பார்த்துக் கொள்ளலாம் என்றோம்.

திரு கிரி அவர்களைப் பற்றி எல்லோரிடமும் ஒரு வித மாறுபட்ட கருத்து இருக்கிறது.  அவரது பின்னூட்டங்களுக்கு எல்லோரும் பின் வாங்குகிறார்கள் என நினைக்கிறேன்.  அவரது மனதில் பட்டதை எழுதுகிறார்.  எந்த குழு மனப்பான்மையோ, யார் மனதையும் காயப்படுத்த வேண்டும் என்றோ, யாருடனும் பகைமை உணர்ச்சியோ கிடையாது.  எனது பக்கத்தில் திரு கிரி தான் எனக்கு சரியான விமர்சகர்.  எனது பதிவில் “விமர்சனம் செய்பவர்கள்/மாற்றுக் கருத்து சொல்பவர்கள்” எனது நெருங்கிய நண்பர்கள் தான்.

திரு ரவி சாரங்கன், திரு கார்த்திக் லட்சுமி நரசிம்மன், திரு ஸ்ரீ கருடாழ்வான், திரு பிரகாஷ் எம் ஸ்வாமி, திரு சொல் கேளான் கிரி, திரு ராம் குமார், திருமதி ஜோஸ்பின் பாபா = இவர்களிடம் நான் கற்றுக் கொள்கிறேன்; என்னைத் திருத்திக் கொள்கிறேன். (இன்னும் சிலர் விட்டுப் போயிருக்கலாம், பொறுத்துக் கொள்ளுங்கள்).

திரு கிரி அவர்களைப் பற்றி எனது கருத்து.  அவர் பலாப்பழம் போன்றவர்.  அவரது இனிமை பழகிப் பார்த்தால் தான் தெரியும்.

ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சியை எழுதுகிறேன்.  சிவகாசியில் இருக்கும் போது அவருக்கு போனில் வந்த செய்தியை காண்பித்தார்.  தேனி நண்பர் ஒருவரை இவர் unfriend செய்திருக்கிறார்; அதற்கு அவர் வருத்தம் தெரிவித்து செய்தி அனுப்பியிருந்தார்; அதை காண்பித்தார்.  இவரும் மிகவும் மனம் வருத்தப் பட்டார்.  இந்த நிகழ்ச்சியை சில நாட்கள் கழித்து தேனி நண்பருக்கு தனிச்செய்தியில் சொன்னேன்.

இவரது கருத்துகள் தீர்க்கமானவை.  இவரைப் பற்றி இவரே சொல்கிறார், சில செய்திகள்:

சொல்கேளான்... பொல்லாதவன்... 
பொய் சொல்லாதவன்... 
நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன் 
வம்புக்கும் தும்புக்கும் போகிறவன்..
எங்கெங்லாம் இருள் இருக்கிறதோ 
அங்கெல்லாம் மெழுகுவத்தியாய் 
ஒளி வழங்குகிறவன்... 
சட்ட ரீதியாகத் தவறு செய்யாதவன்.. 
இரண்டு கவிதைத் தொகுதிகள் 
நான்கு கட்டுரை நூல்கள் எழுதியிருப்பவன்..

உன் அறிவைக் கொண்டு சிந்தி 
என்று சொன்ன பெரியாரையும் 
உலகில் எங்கு அநீதி நடந்தாலும் அதைக் 
கண்டு நீ கோபப்படுகிறாய் என்றால் 
நீயும் நானும் நண்பனே என்று சொன்ன சேகுவராவையும் பாராட்டுகிறவன்.. 

------
இந்த அளவுக்குப் போதுமென்று 
நிளைக்கிறேன். இதற்குள் நீங்கள் வேறு தளங்களுக்கும் வலைப் பக்கங்களுக்கும் 

போயிருப்பீர்கள்..காதல் கவிதைகளைத் தேடி... 

இவரது சில நிலைத்தகவல்கள்

இன்று ஒருசெய்தி படித்தேன்---
“2-ம் வத்திக்கான் சங்கப் பொன்விழாவும்
திருச்சபையில் தலித் வாழ்வும்...அழைப்பு விடுப்பவர்கள்..ஒருங்கிணைந்த தலித் கிறிஸ்துவ இயக்கங்கள்...கூட்டம் 22.09.12... லயோலா கல்லூரி..

--தெரியாமல்தான் கேட்கிறேன்...

தேவனின் திருச்சபையில் எல்லோரும் கர்த்தரின் பிள்ளைகள்தானே.. எங்கிருந்து வந்தது சாதி..?
--பரமபிதாவே ... இவர்களை மன்னியும்.. ஆமென்..


தங்கள் கடவுளை அவமதித்து மனதைப் புண்படுத்தி விட்டார்கள் என்று சாலையில் இறங்கி போராடுகிறார்கள் சில இஸ்லாமிய சகோதரர்கள்...

மக்களுக்கும் பொதுச் சொத்துக்கும் சேதம் விளைவிப்பதைத் தவிர்த்து இறைவனிடம் கையேந்தி வேண்டினால் இறைவன் அவர்களை தண்டித்து விட மாட்டாரா?

எந்த மதத்தினராக இருந்தாலும்... எந்தப் பிரச்சினை களுக்கும் வன்முறையில் ஈடுபடுவது... பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது.. மக்களுக்கு இடையூறு செய்வது போன்ற்வை மிகவும் கண்டிக்கத் தக்கதாகும்...

ஏன் அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கிறது ...காவல் துறையினரை அடி வாங்க வைக்கிறது என்பது புரியவில்லை...?

விநாயகனே....

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்
கோலம் செய் துங்கக் கரிமுகத்து தூமணியே
நீ எம் மக்களுக்கு பகுத்தறிவை மட்டும் தா....

எனது கருத்து:
இவருக்கு யார் மீதும் வெறுப்பும் கிடையாது, விருப்பும் கிடையாது.  எந்த மத சார்பும் கிடையாது, துவேஷமும் கிடையாது.

நாங்கள் அவருடன் எடுத்துக் கொண்ட படங்கள்:



மிக்க நன்றி நண்பர்களே.