வெள்ளி, ஜூன் 03, 2011


                                        








                      

 புத்தகங்களை பற்றி 

                                            திருவாங்கூர் அடிமைகள்

பேரா.முனை.சா.குமரேசன், M.A.,M.Phil.,M.Ed.,D.J., D.L., Ph.d.,
விரிவுரையாளர், தமிழ்த்துறை,
நாடார் மகாஜன சங்க காமராஜ் கல்வியியல் கல்லூரி,
பழவிளை, குமரி மாவட்டம்.

     இந்த புத்தகம் திருவிதான்கூரிலிருந்து கன்யாகுமரி பகுதி பிரிந்து தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்ட வரலாறு, மக்கள் அனுபவித்த அவதிகளை பற்றிய விபரங்கள் அடங்கிய புத்தகம்.  நாடார் மக்களின் வரலாறு அருமையாக தொகுக்கப்பட்டிருக்கிறது.படித்து பாது காக்கப்பட வேண்டிய புத்தகம். ஒவ்வொரு அத்தியாயத்திலும் எந்தெந்த புத்தகங்களில், அரசாங்க ஆவணங்களில் இருந்து விபரங்கள் திரட்டப் பட்டன என்ற விபரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.இந்த புத்தகத்தின் விலை ரூபாய் நூறு.


                                                  தென்னாட்டு மாமணிகள்

டாக்டர் பி.எஸ்.ராஜ். M.Com.,M.A., Dip.in Hindi, D.Lit.,
    இந்த புத்தகம் - அகத்தியர், மாவீரன் அனந்த பத்மநாபன் நாடார், ஐயா வைகுண்ட சுவாமிகள், மார்ஷல் நேசமணி ஆகியோரைப் பற்றிய அருமையான வரலாற்றுத் தொகுப்பு. கடல்கோளுக்கு முந்தைய தென் தமிழ்நாட்டின் வரலாறும் அருமையாக தொகுக்கப்பட்டிருக்கிறது. இந்த புத்தகத்திலும் நாடார் மக்களின் வரலாறு ஆதாரப் பூர்வமாக தொகுக்கப் பட்டிருக்கிறது. இந்த புத்தகம் படித்து பாது காக்கப்பட வேண்டிய புத்தகம். இதன் விலை ரூபாய் நூற்றி இருபத்தைந்து.

  
                                                            சமுதாய நண்பன் 
ஆசிரியர் - டாக்டர் பி.எஸ்.ராஜ். M.Com., M.A., Dip.in Hindi., D.Lit.,

           மாதமொருமுறை வரும் இதழ் - வருட சந்தா ரூபாய் நூற்றி இருபத்தைந்து. 

   இந்த புத்தகம் பல்சுவை இதழ். கதைகள், கட்டுரைகள், கவிதைகள், மொழிப் பயிற்சி என பல்வேறு விஷயங்கள் அடங்கிய புத்தகம். வாங்கி படிக்கலாம்.அனைத்துப் புத்தகங்களும் கிடைக்கும் இடம்.

 டாக்டர் பி.எஸ்.ராஜ்,
1348,  சிங்காரத்தோப்பு, பார்வதிபுரம்,
வெட்டூர்ணிமடம் அஞ்சல்,
நாகர்கோவில். 629 003. (குமரி மாவட்டம்).
தொலைபேசி: 04652 231578 அலைபேசி : 94438 44734தங்கள்

தேவைக்கு மேற்கண்ட முகவரிக்கு பணம் அனுப்பி புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம்.

              நல்ல முயற்சிக்கு ஆதரவு கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
                                                                 மிக்க நன்றி

                        


9 கருத்துகள்:

  1. அருமையான புத்தக அறிமுகங்களுக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  2. இந்தமுறை ஊர் வரும்போது நேரில் போயி வாங்கி படிக்கிறேன் ஐயா...

    பதிலளிநீக்கு
  3. விபரம் தந்தமைக்கு நன்றிகள்....

    பதிலளிநீக்கு
  4. புத்தக விவரங்களுக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  5. புத்தகம் எழுதுவதை விட சிறந்த விஷயம், இப்படிப்பட்ட ஊக்குவிப்புகள். அருமை, ஐயா....

    பதிலளிநீக்கு
  6. ஆக்கபூர்வமான செய்திகளை தங்கள் வலைப்பூவின் மூலம் கொண்டு வருவதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. தகவல்களுக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  8. தகவல்களுக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு